நவகிரஹங்களின் முழு விபரம்
ஒரு ஆண் குழந்தையோ அல்லது பெண் குழந்தையோ அதன் ஐந்து வயது வரை குருவின் காரகத்தால் ஆளுமை செய்யப்படும். புதன் 5 வயது முதல் 15 வயது வரை உள்ள பருவம் புதனின் காரகத்தால் ஆளுமை செய்யப்படும். செவ்வாய் 15 வயது முதல் 22 வயது வரை உள்ள நிலை ஆண் மற்றும் பெண் பருவமடையும் வயது. இந்த நிலையில் காம குணங்கள் நிறைந்து காணப்படும்.
இவர்கள் செவ்வாயின் காரகத்தால் ஆளுமை செய்யப்படுவார்கள். செவ்வாயை போககாரகர் எனவும் அழைப்பர். சுக்கிரன் திருமணம் ஆகாத பெண்கள் அனை வருக்கும் சுக்கிரன் காரகமாக அமைவார். சுக்கிரனை காமகாரகன் அல்லது களத்திர காரகன் என்று அழைப்பர். சூரியன் ஒர் ஆண் குழந்தை பெற்றவுடன் அவர் சூரியனின் காரகமான தந்தை காரகம் வகிக்க ஆரம்பிப்பார்.
சந்திரன் ஒரு பெண் குழந்தை பெற்றவுடன் சந்திரனின் காரகம் வகிக்க ஆரம்பிப்பார். இராகு ஆண் தான் பெற்ற குழந்தைக்கு திருமணம் ஆகி குழந்தை பெற்றவுடன் பாட்டன் காரகமான இராகுவின் காரகத்தை வகிக்க ஆரம்பிப்பார். கேது பெண் தான் பெற்ற குழந்தை திருமணம் ஆகி குழந்தை பெற்றவுடன் பாட்டி காரகமான கேதுவின் காரகத்தை வகிக்க ஆரம்பிப்பார். சனி பாட்டன் காரகமும், பாட்டி காரகமும் உடைய மனிதர்கள் வயதான காலத்தில் சனியின் காரகமான ஆயுள் காரகமாக மாற்றம் அடைகின்றனர்.
1. சூரியன்
தன்மை : ஒளிப்பிழம்பானவர்
கிரக வரிசை : நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம்
இராசி : சிம்மராசிக்கு அதிபதி.
திக்கு : கிழக்கு
அதிதேவதை : அக்னி
ப்ரத்யதி தேவதை : ருத்திரன்
நிறம் : சிவப்பு
வாகனம் : ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்
தானியம் : கோதுமை
மலர் : செந்தாமரை , எருக்கு
வஸ்திரம் : சிவப்பு
ரத்தினம் : மாணிக்கம்
அன்னம் : கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்
அமைவு : நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.
உலோகம் : தாமிரம்
உறுப்பு : கண்கள்
உறவு : ஜாதகரின் தந்தையின் நிலையை குறிக்கும்
நட்சத்திரம் : உத்திரம், உத்திரட்டாதி, கார்த்திகை
குணம் : தாமஸம் (அரக்கர் குணம்)
சுபாவம் : குரூரர்
சுவை : காரம்
உடல் அங்கம் : மார்பு
தாது : எலும்பு
நோய் : பித்தம்
பஞ்சபூதம் : நெருப்பு
பார்வை நிலை : இருக்கும் இடத்தில் இருந்து முழுமையாக 7-ம் பார்வை 3,10-ம் இடம் கால் பங்கு, 5,9-ம் இடம் அரை பங்கு, 4,8-ம் இடமுக்கால் பங்கு
பாலினம் : ஆண்
உபகிரகம் : காலன்
ஆட்சி ராசி : சிம்மம்
உச்ச ராசி : மேஷம்
மூலத்திரிகோண ராசி : சிம்மம்
நட்பு ராசி : கடகம், விருச்சிகம், தனுசு, மீனம்
சமமான ராசி : மிதுனம், கன்னி
பகை ராசி : ரிஷபம், மகரம், கும்பம்
நீச்ச ராசி : துலாம்
திசை ஆண்டுகள் : ஆறு ஆண்டுகள்
ஒரு ராசியில்
சஞ்சரிக்கும் காலம் : ஒரு மாதம் காலம்
நட்பு கிரகங்கள் : சந்திரன், செவ்வாய், குரு
சமமான கிரகங்கள் : புதன்
பகையான கிரகங்கள் : சுக்ரன், சனி, ராகு-கேது
அதிக பகையான கிரகம் : சனி
தொழில் : பொன், வணிகம், மருந்துப் பொருட்கள், கம்பளி ஆடைகள், ஐ.ஏ.எஸ்.
மனிதனுக்கு தேக புஷ்டி என்னும் பலத்தையும், சக்தியையும், ஆற்றலையும் தருவது சூரியன். பலம் குறைந்து காற்று போன்ற உடலை தருவதும் சூரியனே. உடல் உஷ்ணம், முதுமையில் வரும் தளர்வு உள்ளிட்ட நோய்கள், நாக்கு ருசியை மறந்துபோவது, தெளிவான மனநிலை இல்லாமல், தன்னம்பிக்கை குறைந்து சோர்வான உடலைத் தருவது, எந்த நேரமும் அலைந்து திரிந்தபடி உடலை வருத்திக் கொள்வது, வலுவான எலும்புகள் இல்லாமல் இருப்பது, இருதயம் தொடர்பான அறுவை சிகிச்சைகள், கண் பார்வைக் கோளாறு, தலைவலி, தலைசுற்றல், சிறுசிறு பிரச்சினைகளுக்கு கடும் கோபம் கொள்ளுதல் உள்ளிட்ட நோய்களுக்கு சூரியனே காரணமாக இருக்கிறார்.
* ரிஷபம், மகரம், கும்பம் ஆகியவை சூரியனுக்கு பகை ராசிகளாகும். இந்த ராசிகளில் சூரியன் நின்றால், அந்த நபருக்கு வயிற்றுக் கோளாறு, மூலநோய் ஏற்படும். மேலும் உங்களது திறமைக்கு சோதனைகள் வரக்கூடும். தந்தைக்கு பல சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கும்.
* சூரியன் தனக்கு நீச்ச ராசியான துலாம் ராசியில் நின்று இருந்தால், மன தைரியம் குறையும். தலையில் ஏதாவது பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். நெஞ்சு வலி, இதயத்துடிப்பு வேகமாக இருக்கும். தந்தை இல்லாமல் இருக்கலாம் அல்லது உயிரோடு இருந்தும் எவ்விதமான பயன் இல்லாமல் இருக்கலாம்.
* சூரியன் தனது பகை கிரகங்களான சுக்ரன், சனி, ராகு, கேது ஆகியோரோடு இணைந்து எந்த ராசியில் இருந்தாலும் சரி... அந்த நபர்களுக்கு எலும்பு முறிவு, தலையில் ரத்தம் கசிவு ஏற்படக்கூடும். தந்தை சுயநலமாக இருப்பார். தந்தையின் மரணத்திற்கு ஜாதகர் ஒரு வகையில் காரணமாக இருப்பார்.
* சூரியன் தனது பகை கிரகங்களின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், நோயை தீர்ப்பதில் போதிய அக்கறை காட்டாமல் இருப்பார்கள். நோய்களை பெருக்கிக்கொள்ளும் வகையில் நடந்துகொள்வார்கள்.
* சூரியன் லக்னத்திற்கு 6,8,12-ம் ராசியில் மறைவு பெற்று நின்றால், பரம்பரை வியாதி வரக்கூடும். நோய்க்கு தவறான மருந்துகள் எடுத்து அவதிப்படுவார்கள். தந்தைக்கு கண்டங்கள் வரக்கூடும் அல்லது சிறு வயதில் தந்தையை இழந்து இருப்பார்கள்.
* சூரியன் லக்னத்திற்கு பாதகாதிபதியுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது பாதகாதிபதியின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ, நோய்கள் அகல அவ்வப்போது மாத்திரை எடுத்துக் கொள்வீர்கள். அதனால் நிரந்தர தீர்வு காண முடியாத நோய்கள் வரலாம். இந்த நபரின் தந்தைக்கு ஆயுள் குறைவதும், தந்தையால் எவ்விதமான நன்மைகள் இன்றியும் இருப்பார்.
* சூரியனே லக்னத்திற்கு பாதகாதிபதியாகவும் பாவியாகவும் இருந்தால், அந்த ஜாதகருக்கு நன்மைகள் பலவும் தடைபடும். கண் பார்வை குறையும். தொற்று நோய்கள், பரம்பரை நோய்கள் வரக்கூடும். தந்தைக்கு உதவாத ஜாதகராக அவர் இருப்பார்.
* சூரியனை பகை கிரகங்கள் பார்வை செய்தால், புதுவகையான நோய்கள் வரக்கூடும். தந்தைக்கு பல தொல்லைகள் ஏற்படக்கூடும்.
* சூரியன் அஷ்டவர்க்கத்தின் 4 பரல்களுக்கு கீழ் இருந்தால், சூரிய கிரகத்தால் வரக்கூடிய நோய்களில் ஏதாவது ஒன்று ஜாதகருக்கு வரக்கூடும். நெஞ்சு பதறக்கூடிய பல சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். தந்தைக்கு வளர்ச்சி தடைபடும்.
சூரிய காயத்ரி :
குணம் : தாமஸம் (அரக்கர் குணம்)
சுபாவம் : குரூரர்
சுவை : காரம்
உடல் அங்கம் : மார்பு
தாது : எலும்பு
நோய் : பித்தம்
பஞ்சபூதம் : நெருப்பு
பார்வை நிலை : இருக்கும் இடத்தில் இருந்து முழுமையாக 7-ம் பார்வை 3,10-ம் இடம் கால் பங்கு, 5,9-ம் இடம் அரை பங்கு, 4,8-ம் இடமுக்கால் பங்கு
பாலினம் : ஆண்
உபகிரகம் : காலன்
ஆட்சி ராசி : சிம்மம்
உச்ச ராசி : மேஷம்
மூலத்திரிகோண ராசி : சிம்மம்
நட்பு ராசி : கடகம், விருச்சிகம், தனுசு, மீனம்
சமமான ராசி : மிதுனம், கன்னி
பகை ராசி : ரிஷபம், மகரம், கும்பம்
நீச்ச ராசி : துலாம்
திசை ஆண்டுகள் : ஆறு ஆண்டுகள்
ஒரு ராசியில்
சஞ்சரிக்கும் காலம் : ஒரு மாதம் காலம்
நட்பு கிரகங்கள் : சந்திரன், செவ்வாய், குரு
சமமான கிரகங்கள் : புதன்
பகையான கிரகங்கள் : சுக்ரன், சனி, ராகு-கேது
அதிக பகையான கிரகம் : சனி
தொழில் : பொன், வணிகம், மருந்துப் பொருட்கள், கம்பளி ஆடைகள், ஐ.ஏ.எஸ்.
சூரியனோடு, ராகு, கேது, சனி, செவ்வாய் ஆகிய கிரகங்கள் இணையும் காலகட்டத்தில், பொருளாதாரத்தில் முதன்மை பெற்ற நாடுகளுக்கு தீவிரவாதம் மற்றும் இயற்கை பேரிடர்களால் பல தொல்லைகள் ஏற்படக் கூடும்.
படுபாதகச் செயல்கள் தலைவிரித்தாடும். அங்குள்ள மக்கள் பெரும் பயத்தில் வாழும் சூழ்நிலை உருவாகும். அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி உண்டாகும். நிர்வாகத்தன்மை சீர்குைலயும்.
அதேபோல் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடுகளில், ஆட்சி குழப்பம், முக்கிய தலைவர்களின் இறப்பு, ஆட்சி கவிழ்ப்பு, கட்சி களின் மோதல், பொதுமக்கள் குழப்பம், உலகையே அச்சப்படுத்தும் புதிய நோய்கள், தொற்று நோய்களால் பொதுமக்கள் பாதிப்பு, அரசு மீது பொதுமக்கள் கோபம் கொள்ளுதல், பொதுமக்கள் புரட்சிகளில் இறங்குதல் போன்வை ஏற்படக்கூடும்.
ஜாதகத்தில் சூரியன் யோகம் தரக்கூடிய நிலையில் இருந்தால் பல நன்மைகளும் உண்டாகும். சூரியன் யோகம் ஒருவரை உலகமே திரும்பி பார்க்க வைக்கும். தீராத நோய்கள் அனைத்தும் தீரும். மன தைரியம், உடல் வலிமை, நோயைத் தாங்கும் சக்தி வந்து சேரும். அரசியல் அதிகாரம் தானாக தேடி வரும். நற்பெயர் எடுப்பார்கள், தலைவர் பதவி தேடி வரும். மிகப்பெரிய தொழிற்சாலைக்கு முதலாளி மற்றும் நிர்வாகியாக வரக்கூடும்.
வேலைக்காரர்கள் விசுவாசமாக இருப்பார்கள். தந்தை வழி உதவிகள், தந்தைக்கு உயர்வுகள், வெற்றிகள் வரக்கூடும். தந்தை வழி சொத்துகள் கைக்கு வரலாம். மனதில் நினைத்ததை நடத்திக் காட்ட போதிய மன ஆற்றல், அறிவும், திறமையும் வெளிப்படும். தெளிவான மனநிலை பிறருக்கு அறிவுரை கூறி வழி நடத்தும் சக்திகள் வரக்கூடும். அரசனையே எதிர்த்து நிற்கும் மனத் துணிவை பெறுவீர்கள். எடுத்த முடிவில் இறுதிவரை உறுதியாக இருப்பீர்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு திடமான முடிவெடுக்கும் சக்தியை தருவதும், பிரச்சினைகளில் இருந்து விடுபட வைக்கும் சக்தியும் சூரியனுக்கு உண்டு.
வேலைக்காரர்கள் விசுவாசமாக இருப்பார்கள். தந்தை வழி உதவிகள், தந்தைக்கு உயர்வுகள், வெற்றிகள் வரக்கூடும். தந்தை வழி சொத்துகள் கைக்கு வரலாம். மனதில் நினைத்ததை நடத்திக் காட்ட போதிய மன ஆற்றல், அறிவும், திறமையும் வெளிப்படும். தெளிவான மனநிலை பிறருக்கு அறிவுரை கூறி வழி நடத்தும் சக்திகள் வரக்கூடும். அரசனையே எதிர்த்து நிற்கும் மனத் துணிவை பெறுவீர்கள். எடுத்த முடிவில் இறுதிவரை உறுதியாக இருப்பீர்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு திடமான முடிவெடுக்கும் சக்தியை தருவதும், பிரச்சினைகளில் இருந்து விடுபட வைக்கும் சக்தியும் சூரியனுக்கு உண்டு.
சூரியனால் வரக்கூடிய நோய்கள்
மனிதனுக்கு தேக புஷ்டி என்னும் பலத்தையும், சக்தியையும், ஆற்றலையும் தருவது சூரியன். பலம் குறைந்து காற்று போன்ற உடலை தருவதும் சூரியனே. உடல் உஷ்ணம், முதுமையில் வரும் தளர்வு உள்ளிட்ட நோய்கள், நாக்கு ருசியை மறந்துபோவது, தெளிவான மனநிலை இல்லாமல், தன்னம்பிக்கை குறைந்து சோர்வான உடலைத் தருவது, எந்த நேரமும் அலைந்து திரிந்தபடி உடலை வருத்திக் கொள்வது, வலுவான எலும்புகள் இல்லாமல் இருப்பது, இருதயம் தொடர்பான அறுவை சிகிச்சைகள், கண் பார்வைக் கோளாறு, தலைவலி, தலைசுற்றல், சிறுசிறு பிரச்சினைகளுக்கு கடும் கோபம் கொள்ளுதல் உள்ளிட்ட நோய்களுக்கு சூரியனே காரணமாக இருக்கிறார்.
* ரிஷபம், மகரம், கும்பம் ஆகியவை சூரியனுக்கு பகை ராசிகளாகும். இந்த ராசிகளில் சூரியன் நின்றால், அந்த நபருக்கு வயிற்றுக் கோளாறு, மூலநோய் ஏற்படும். மேலும் உங்களது திறமைக்கு சோதனைகள் வரக்கூடும். தந்தைக்கு பல சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கும்.
* சூரியன் தனக்கு நீச்ச ராசியான துலாம் ராசியில் நின்று இருந்தால், மன தைரியம் குறையும். தலையில் ஏதாவது பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். நெஞ்சு வலி, இதயத்துடிப்பு வேகமாக இருக்கும். தந்தை இல்லாமல் இருக்கலாம் அல்லது உயிரோடு இருந்தும் எவ்விதமான பயன் இல்லாமல் இருக்கலாம்.
* சூரியன் தனது பகை கிரகங்களான சுக்ரன், சனி, ராகு, கேது ஆகியோரோடு இணைந்து எந்த ராசியில் இருந்தாலும் சரி... அந்த நபர்களுக்கு எலும்பு முறிவு, தலையில் ரத்தம் கசிவு ஏற்படக்கூடும். தந்தை சுயநலமாக இருப்பார். தந்தையின் மரணத்திற்கு ஜாதகர் ஒரு வகையில் காரணமாக இருப்பார்.
* சூரியன் தனது பகை கிரகங்களின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், நோயை தீர்ப்பதில் போதிய அக்கறை காட்டாமல் இருப்பார்கள். நோய்களை பெருக்கிக்கொள்ளும் வகையில் நடந்துகொள்வார்கள்.
* சூரியன் லக்னத்திற்கு 6,8,12-ம் ராசியில் மறைவு பெற்று நின்றால், பரம்பரை வியாதி வரக்கூடும். நோய்க்கு தவறான மருந்துகள் எடுத்து அவதிப்படுவார்கள். தந்தைக்கு கண்டங்கள் வரக்கூடும் அல்லது சிறு வயதில் தந்தையை இழந்து இருப்பார்கள்.
* சூரியன் லக்னத்திற்கு பாதகாதிபதியுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது பாதகாதிபதியின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ, நோய்கள் அகல அவ்வப்போது மாத்திரை எடுத்துக் கொள்வீர்கள். அதனால் நிரந்தர தீர்வு காண முடியாத நோய்கள் வரலாம். இந்த நபரின் தந்தைக்கு ஆயுள் குறைவதும், தந்தையால் எவ்விதமான நன்மைகள் இன்றியும் இருப்பார்.
* சூரியனே லக்னத்திற்கு பாதகாதிபதியாகவும் பாவியாகவும் இருந்தால், அந்த ஜாதகருக்கு நன்மைகள் பலவும் தடைபடும். கண் பார்வை குறையும். தொற்று நோய்கள், பரம்பரை நோய்கள் வரக்கூடும். தந்தைக்கு உதவாத ஜாதகராக அவர் இருப்பார்.
* சூரியனை பகை கிரகங்கள் பார்வை செய்தால், புதுவகையான நோய்கள் வரக்கூடும். தந்தைக்கு பல தொல்லைகள் ஏற்படக்கூடும்.
* சூரியன் அஷ்டவர்க்கத்தின் 4 பரல்களுக்கு கீழ் இருந்தால், சூரிய கிரகத்தால் வரக்கூடிய நோய்களில் ஏதாவது ஒன்று ஜாதகருக்கு வரக்கூடும். நெஞ்சு பதறக்கூடிய பல சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். தந்தைக்கு வளர்ச்சி தடைபடும்.
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாது....
மூல மந்திரம் :
ஓம் ஹ்ரெளம் ஸ்ரீம் ஆம் க்ரஹாதி ராஜாய ஆதித்யாய ஸ்வாஹா
சூரியனை வழிபட்டால் வாழ்வில் மங்களமும், ஆரோக்கியமும் கிடைக்கும்.
நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும். அதாவது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாகச் சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும்.
நவகிரகங்களை வழிபடுவது நல்லது என்றாலும், எந்த ஒரு கோயிலிற்குச் சென்றாலும் மூலவரை வழிபடாமல் வெறும் நவகிரக வழிபாட்டை மற்றும் மேற்கொள்வது தவறானது. நவக்கிரகங்களின் நாயகனாக விளங்குபவர் சூரியன். நமது ஐந்து மதத்தின் ஆறு பிரிவுகளில் ஒன்றான செளரம் என்பது சூரியனையே முழுமுதல் கடவுளாக கொண்டாடுகிறது. இருகரங்களில் தாமரை ஏந்தி, வலம் புறம் உஷா, இடது புறம் பிரத்யுஷா என இரு மனைவியருடன் ஏழு குதிரை பூட்டிய ரதத்தில் கம்பீரமாய் வலம் வருபவர்.
சூரியன் பகவான் - 10 சுற்றுகள் சுற்ற வேண்டும்
No comments:
Post a Comment