2. சந்திரன்
பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர் .
விவசாயம், மீன் பிடித்தல், பால் வியாபாரம், முத்துக்குளித்தல், கப்பல் கட்டும் துறை, கடற்பயணம் செய்தல், உப்பு காய்ச்சுதல், ஆலைத் தொழில், ஜவுளி வியாபாரம் செய்தல். சந்திரன் ஆட்சி உச்சம் பெற்று இருப்பவர்கள், இவற்றில் ஏதேனும் தொழில் ஈடுபட்டால், நிச்சயம் வெற்றி பெறலாம்.
மனோகாரகனான சந்திரன் நவக்கிரகங்களில் இரண்டாம் இடத்தை வகிப்பவர்.
தந்நோ சந்திர ப்ரசோதயாது.....
பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர் .
பாபராகவும் விளங்குபவர்.
இராசி : கடக ராசிக்கு அதிபதி.
திக்கு : தென்கிழக்கு
அதிதேவதை : ஜலம்
இராசி : கடக ராசிக்கு அதிபதி.
திக்கு : தென்கிழக்கு
அதிதேவதை : ஜலம்
ப்ரத்யதி தேவதை : கௌரி
தலம் : திருப்பதி
நிறம் : வெள்ளை
வாகனம் : வெள்ளைக் குதிரை
தானியம் : நெல்
மலர் : வெள்ளை அரளி
வஸ்திரம் : வெள்ளாடை
ரத்தினம் : முத்து
அன்னம் : தயிர் சாதம்
தலம் : திருப்பதி
நிறம் : வெள்ளை
வாகனம் : வெள்ளைக் குதிரை
தானியம் : நெல்
மலர் : வெள்ளை அரளி
வஸ்திரம் : வெள்ளாடை
ரத்தினம் : முத்து
அன்னம் : தயிர் சாதம்
உறவு : ஜாதகரின் தாயாரின் நிலையை குறிக்கும்
உறுப்பு : வலது கண்
உலோகம் : ஈயம்
உணர்வு, சாந்தம், பொறுமை, சகிப்பு தன்மை, சோம்பல், காதல்,
நட்சத்திரம் : ரோஹினி, அஸ்தம், திருவோணம்
குணம் : சாத்வீகம் (வளர்பிறை சுபர்), குரூரம் (தேய்பிறை பாவர்)
சமித்து : கல்யாண முருங்கை
தேவதை : பார்வதி
ஆசன வடிவம் : சதுரம்
வாகனம் : முத்து விமானம்
தானியம் : பச்சரிசி, நெல்
பிணி : சீதளம்
சுவை : இனிப்பு
ராகம் : சாவேரி
நட்பு : சூரியன், புதன்
பகை : ராகு, கேது
சமம் : செவ்வாய், குரு, சனி, சுக்ரன்
ஆட்சி : கடகம்
உச்சம் : ரிஷபம்
நீசம் : விருச்சிகம்
திசை காலம் : 10 ஆண்டுகள்
பார்வை : 7-ம் பார்வை
மூலத் திரிகோணம் : கடகம்
பாலினம் : பெண்
கோச்சார காலம் : 2¼ நாள்
மனோகாரகனான சந்திரன் நவக்கிரகங்களில் இரண்டாம் இடத்தை வகிப்பவர்.
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் சூரிய ஒளியை பெற்றே இயங்குகிறது. சூரியன் பகலின் நாயகன் என்றால், சூரியனின் ஒளியை பகலில் பெற்று இரவில் குளுமையை தரும் நாயகி சந்திரன். ஒரு உயிரை ஜனிக்க செய்வது சூரிய ஒளி என்றால், உயிரை தாங்கும் உடல் சந்திரன். ஆன்மாவை உடல் என்றால், மனம் சந்திரனாகும். சூரியனுக்கு அடுத்து நம் கண்ணுக்கு தெளிவாக தெரியக்கூடிய கிரகம் சந்திரன். சூரியனைப் போலவே சந்திரனும் பெயர், புகழைக் கொடுப்பான். இயற்கையின் அரசி சந்திரனைப் பற்றிய சில பயன் தரும் ஜோதிடத் தகவல்களை காணலாம்.
சந்திரனின் பிற பெயர்கள் கலாநிதி, மதி, திங்கள், சசி, சோம என்பதாகும். மனோகாரகனான சந்திரன் நவக்கிரகங்களில் இரண்டாம் இடத்தை வகிப்பவர். சந்திரன் ஒரு ராசியில் இரண்டே கால் நாட்கள் சஞ்சரிக்கிறார். ராசி மண்டலத்தை சுற்றிவர அவருக்கு 27 நாட்கள் ஆகிறது.
சந்திரன் மனோகாரகன் என்பதாலும், அதன் இயக்கம் விரைவாக இருப்பதாலும் சந்திரனின் இயக்கத்திற்கு ஏற்ப மனிதர் களின் மனம், எண்ண அலைகள் ஒவ்வொரு நிமிடமும் மாறிக் கொண்டே இருக்கிறது.
ஜனன ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்றிருந்தால் பண்பு, பாசம், நல்ல மனநிலை, கவிதை, கற்பனைத் திறன், கவுரவம், புகழ், நிம்மதியான உறக்கம், அரசு வழியில் ஆதரவுகள் உண்டாகும். தாய், தாய் வழி உறவுகளின் நேரடி அன்பும், நேரடி தொடர்பும் அதிகரிக்கும். அம்மன் ஆலய தரிசனம் கிடைக்கும். அடிக்கடி பயணம் செய்ய நேரிடும். விருந்து சாப்பாடு, பலவிதமான உணவுப் பொருட்களை சமைப்பதில், சாப்பிடுவதில் ஆர்வம் போன்றவை சந்திர தசா காலம் முழுவதும் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
கடக லக்னம், கடக ராசியில் பிறந்தவர்கள், சந்திர தசை புத்தி அந்தரம் நடப்பில் உள்ளவர்கள், சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்களின் தொடர்பு உண்டாகும். வெள்ளை நிற வஸ்துக்களின் சேர்க்கை ஏற்படும். வெள்ளை நிற ஆடைகள் அணிய விரும்புவீர்கள். முக்கிய நதிகள், அருவிகள், சமுத்திரங்களில் நீராடும் வாய்ப்பு உருவாகும்.
சந்திரன் மனோகாரகன் என்பதால், அவர் பலம் இழந்திருந்தால் மனக்குழப்பம், மன நோய், மற்றவர்களிடம் ஒத்துப்போக முடியாத நிலை, எதிலும் தோல்வி, அனுகூலமற்ற நிலை ஏற்படும்.
சந்திரன் பலம் குறைந்து தன் தசாவையோ, புத்தியையோ, அந்தரத்தையோ நடத்தும் காலத்தில், கெடுபலன்கள் நடக்கத் தொடங்கும். மேலும், சந்திரனுடன் இணைந்த கிரகங்களின் தசா, புத்தியிலும் இந்த பலன்களை செய்யும். அதனால் சந்திரன் தொடர்புடைய தசாபுத்தி நடப்பில் உள்ளவர்கள் ஒரு சில எளிய பரிகாரத்தைச் செய்யலாம். சந்திரன் வலுவாக உள்ளவர்களும், இந்த பரிகாரத்தை செய்தால் சந்திர பலம் கூடும்.
திங்கட்கிழமை தோறும் பச்சரிசி சாதம் சாப்பிட வேண்டும். பச்சரிமாவில் மாவிளக்கு செய்து பிரதோஷ வேளையில் நந்திக்கு நெய் தீபம் ஏற்ற வேண்டும். நீர், பசும்பால், அரிசியை திங்கட் கிழமைகளில் தானம் செய்ய வேண்டும். திங்கட்கிழமைகளில், சோமவார விரதம் இருந்து பார்வதி - பரமேஸ்வரரை வணங்க வேண்டும். வெள்ளி பாத்திரங்களை உபயோகிக்க வேண்டும். வளர்பிறையில் சந்திர தரிசனம் செய்ய வேண்டும். திருப்பதி சென்று வெங்கடாசலபதியை தாிசிக்கலாம். திங்களூர் சென்று வழிபாடு செய்ய வேண்டும். பவுர்ணமியில் சத்ய நாராயணர் விரதம் இருக்க வேண்டும்.
சந்திர காயத்ரி
ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹிதந்நோ சந்திர ப்ரசோதயாது.....
மூல மந்திரம் :
ஓம் ஸ்ரீம் க்ரீம் ஹம் ரம் சம் சந்த்ராய நம
சந்திரனை வணங்கினால் புகழ் கிடைக்கும்.
சந்திரனை வணங்கினால் புகழ் கிடைக்கும்.
நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும். அதாவது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாகச் சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும்.
நவகிரகங்களை வழிபடுவது நல்லது என்றாலும், எந்த ஒரு கோயிலிற்குச் சென்றாலும் மூலவரை வழிபடாமல் வெறும் நவகிரக வழிபாட்டை மற்றும் மேற்கொள்வது தவறானது. நவக்கிரகங்களின் நாயகனாக விளங்குபவர் சூரியன். நமது ஐந்து மதத்தின் ஆறு பிரிவுகளில் ஒன்றான செளரம் என்பது சூரியனையே முழுமுதல் கடவுளாக கொண்டாடுகிறது. இருகரங்களில் தாமரை ஏந்தி, வலம் புறம் உஷா, இடது புறம் பிரத்யுஷா என இரு மனைவியருடன் ஏழு குதிரை பூட்டிய ரதத்தில் கம்பீரமாய் வலம் வருபவர்.
சந்திர பகவான் - 11 சுற்றுகள் சுற்ற வேண்டும்
சந்திர பகவான் - 11 சுற்றுகள் சுற்ற வேண்டும்
No comments:
Post a Comment