Sunday, November 10, 2019

சதயம் நட்சத்திரம்

சதயம்


சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புத்தகங்களை படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பீர்கள். மற்றவர்களை கவரக்கூடிய குண நலன்களை கொண்டிருப்பீர்கள். உற்சாகமான மனநிலை கொண்டவராய் இருப்பீர்கள். கோபமான சொற்களை பொறுக்கமாட்டார். ரோகம் உடையவர், இனியவர், பக்திமான், கை, கால் வலுவுள்ளவன், அழகிய வாயை
உடையவர், பொய் பேசமாட்டார். அரசர்க்கு இனியவர், நீராடுவதில் விருப்பம் உடையவர். பகைவரை வெல்பவர், செல்வம் உள்ளவர், வழக்கு உரைப்பவர். பார்ப்பதற்கு வசீகரமான தோற்றம் கொண்டிருப்பர். பால் பாக்கியம் பெற்று செல்வவளத் தோடு வாழ்வர். பொறுமை மிக்க இவர்கள், விசாலமான சிந்தனையுடன் செயல்படுவர். மனதில் எண்ணியதை நிறைவேற்றுவதில் வல்லவர்கள். தீர்க்கமான யோசனைக்குப் பிறகே செயலில் ஈடுபடுவர். செயல்களில் திறமையும், நல்ல நடத்தையும் கொண்டிருப்பர்.


உண்மை, சத்தியம் தவறாதவர்கள்.  உண்மையை நிலைநாட்ட என்ன விலை கொடுக்கவும் தயங்காதவர்கள். இந்த விடாப்பிடி லட்சியத்தால் மற்றவர்களோடு கருத்து மோதல்களையும் சமாளிக்க வேண்டி இருக்கும்.
கோபக்காரர்கள்.  ஆனால் அடுத்த கணம் தணிந்து விடும். தற்பெருமை  புகழ்ச்சி என்பது பிடிக்காது.  இவர்களிடம் ஆயிரம் திறமைகள்  இருந்தாலும், அதை வெளிபடுத்தத் தெரியாது.
பெரும்பாலும் முற்பகுதி வாழ்க்கை சோதனை களமாக அமைகிறது. வாலிபம் கடந்த பிறகுதான் வாழ்க்கை சிறக்கிறது. குடும்ப வாழ்க்கை  சிறப்பாக அமைவதில்லை. திருமணம் ஆகாமலேயே இருப்பவர்களும் உண்டு என்றாலும் வாய்க்கும் வாழ்க்கைத்துணை நற்குணங்கள் அமையப் பெற்றிருப்பார்கள்.
1. சதயம் முதல் பாதத்தில் பிறந்தவர் குணவான், அழகர், உதாரண், சீலன், பசு, பிரமாணர்களின் மேல் அன்புடையவர்.
2. சதயம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் கோபம் உடையவர், கிலேசம் உடையவர், வஞ்சகன். ஆசாரம் அற்ற இழிந்த குலத்தவர்.
3. சதயம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் நல்ல காரியங்களை எல்லாம் முடிப்பவர், பசி உள்ளவர், வயிற்றுநோய் உள்ளவர், பித்தன், சேவக விருத்தி செய்பவர், புத்திமான்.

பெயர் நாமம் 
முதல் பாதம்: கோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
2-வது பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
3-வது பாதம்: ஸி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
4-வது பாதம்: ஸு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 

இவர்கள் தங்களது நட்சத்திர அதிதேவதையான யமதர்மனை வழிபடுவதால், நலம் உண்டாகும்.



4. சதயம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் நஷ்டத்தை உணர்பவர், நினைத்த காரியத்தை முடிப்பவர், நல்லவர், சுகவான்.

நட்சத்திர  அதிதேவதை : யமன்
பரிகார  தெய்வம் :  துர்க்கை
நட்சத்திர  கணம் :  ராட்சஸ கணம்
விருட்சம்  :  கடம்பு(பாலில்லா மரம்)
மிருகம்பெண்  :  குதிரை
பட்சி   :  அண்டங் காக்கா
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – மந்தாரை
அனுகூல தெய்வம் – பத்ர காளி
அனுகூல, அதிர்ஷ்ட கல் – கோமேதகம்
அனுகூல, அதிர்ஷட நிறம் – கருமஞ்சள்
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 8, 9

நட வேண்டிய மரம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா
4 ம் பாதம் - திலகமரம்
பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை நட்டு வைத்தால் நிச்சயம் நன்மை எற்படும்

தொழில் 
வானியல் ஆராய்ச்சி, ஜோதிடம், பத்திரிகை போன்ற துறைகளில் இவர்கள் பிரகாசிப்பார்கள்.

நட்பு , திருமணம் 


 புனர்பூசம், விசாகம், ரோகிணி, திருவோணம், மிருகசீரிடம், அவிட்டம், ரேவதி.

பகை 
வேதை  (ஆகாத நட்சத்திரம்) – ரோகிணி, திருவாதிரை
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம்

நோய்  
நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்
 என்பு சுரம், குளிர் சுரம், பிடிப்பு, கண்நோய், வளி நோய்  நீரேற்றம், வாய்ப்புண், தொண்டைப்புண்


அகத்தியர் அருளிய  நட்சத்திர மந்திரம்

 மூலிக சேவித முனிப்ரசாத சதய தேவி சஹாய க்ருபே.

குரு மூல மந்திரம் :
 சதயம் நட்சத்திரம் - கும்ப  இராசி:
ஓம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ருங் ஸ்ரீம் ஸம் ஸ்ரீ சட்டைநாதரே நம:

காயத்திரி மந்திரம்

ஓம் பேஷஜயா வித்மஹே 
வருண தேஹா தீமஹி 
தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

மந்திரம் குறைந்தது 9 முறையாவது  அல்லது 108 , அதிக பட்சம் 1008 முறை ஜெபிப்பதன் மூலம் நம் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடும்.


No comments:

Post a Comment

sudharsan

96 தத்துவங்கள்

தத்துவங்கள் 96 1. ஆன்ம தத்துவங்கள் -24 2. உடலின் வாசல்கள் -9 3. தாதுக்கள் -7 4. மண்டலங்கள் -3 5. குணங்கள் -3 6. மலங்கள...

ஆன்மீகம்