Sunday, November 10, 2019

ரேவதி நட்சத்திரம்

ரேவதி


ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆள்பாதி ஆடைபாதி என்பதற்கு முழுஉதாரணமாய் உங்களது உடைகளையும் ஆபரணங்களையும் பேணிக் காப்பீர்கள். மற்றவர்களை கவரும் விதமாய் உங்களது செயல்பாடுகள் அமைத்துக் கொள்வீர்கள்ள. மனதிற்கு பிடித்தமான உணவு வகைகளை ருசித்து சாப்பிடுவீர்கள். மற்றவர்களால் புகழப்படும் காரியங்களை செய்வதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பீர்கள். பிராயணம் செய்வதிலும் அதிக நாட்டம் உடையவராய் இருப்பீர்கள். வருங்காலத்திற்கான சேமிப்பை மேற்கொள்வதில் அனைத்து வழிகளையும் பின்பற்றுவீர்கள். பெண்களிடம் பிரியம் உடையவர், பாதி நாள் மிகுந்த செல்வத்துடன் இருப்பார், நல்லவன், பிறர்சொல்கேட்பவர். நல்ல குணவான், அழகான கண்களை உடையவர், வாய் சாதுரியர், பிராமணர்களை வணங்கும் பக்தியுள்ளவர், புத்திமான், இரப்போருக்கு இல்லையென்று கூறாதவர், பழி பாவத்திற்கு அஞ்ச மாட்டான்.


பழி பாவத்திற்கு பயந்தவர்கள்.  நேர்மையாக வாழ்பவர்கள், பேச்சில் இனிமை, கொடுக்கல் வாங்கலில் நாணயம், உள்ளவர். தேவை இல்லாமல் பேசும் குணம் அறவே கிடையாது. மற்றவர்கள்  பேச்சைக் காது கொடுத்துக் கேட்பதில்லை. சுதந்திரப் பிரியர்கள் ரகசியம் காக்கத்  தெரியாது. ஆனால் இவர்கள் சந்தேகப் பிராணிகள்.  எவ்வளவுதான் உயிருக்கு உயிராக பழகினாலும நம்ப மாட்டார்கள்.  நம்பி விட்டால் அவர்களை விட்டு விலகுவதே இல்லை.
மனம் போலவே நடப்பார்கள். தனக்கு சரி என்று தோன்றியதை  துணிந்து செய்வார்கள். மற்றவர்  அபிப்ராயங்களைப்  பற்றி யோசிப்பதில்லை.
சுய முயற்சியில்  முன்னுக்கு வருவார்கள். புத்திசாலித்தனம், சாமர்த்தியம் என்பது கூடப் பிறந்தது.  22 வயது வரை சோதனை காலம். பின் வாழ்க்கையில் உயர்ந்து உன்னத நிலையை எட்டிவிடுவார்கள்.
1. ரேவதி முதல் பாதத்தில் பிறந்தவர் கலகப்பிரியன், நிபுணன், வித்துவான், கிலேசன், சந்தோஷி.
2. ரேவதி இரண்டாம் பாதத்தில் பிறந்தவர் திருடன், தீரன், சௌக்கியவான், கோபி, கருமி, சஞ்சலம் உடையவன், மெலிந்த சரீரம் உடையவன்.
3. ரேவதி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் புத்தியற்றவன், பாபி, வஞ்சக குணம் உள்ளவன், தரித்திறன், நல்ல குணம் இல்லாதவர்.
4. ரேவதி நான்காம் பாதத்தில் பிறந்தவர் தீரன், சத்தியம் பேசுபவர், இழிந்த குலத்தவர், சுகவான், பகைவரை வெல்பவர்.

பெயர் நாமம்
முதல் பாதம்: தே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
2-வது பாதம்: தோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
3-வது பாதம்: ச என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 
4-வது பாதம்: சி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது 

இவர்கள் தங்களது நட்சத்திர அதிதேவதையான சனி பகவானை வழிபடுவதன் மூலம் வாழ்வில் வெற்றிகள் அதிகரிக்கும்.



நட்சத்திர அதிதேவதை : ஈஸ்வரன்
பரிகாரத் தெய்வம்  : பெருமாள்
நட்சத்திர குணம்  : தேவ கணம்
விருட்சம்   : இலுப்பை 
மிருகம்   : பெண் யானை
பட்சி   : வல்லூறு
கோத்திரம்  : அகத்தியர்
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – கருங்குவளை
அனுகூல தெய்வம் – சனீஸ்வரன்
அனுகூல, அதிர்ஷ்ட கல் – நீலக்கல்
அனுகூல, அதிர்ஷட நிறம் – கருநீலம்
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 6, 8

நட வேண்டிய மரம் 
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா
பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை நட்டு வைத்தால் நிச்சயம் நன்மை எற்படும்.

தொழில் 
நிதித்துறை, நீதித்துறை, கடல் சார்ந்த தொழில்கள், ஆன்மிகம் சார்ந்த பணிகள் இவர்களுக்கு வளர்ச்சியை தரும்.


நட்பு , திருமணம் 


 அசுவினி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், அவிட்டம், புனர்பூசம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி.

பகை 
வேதை  (ஆகாத நட்சத்திரம்) – மகம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – அசுவினி, ஆயில்யம், மகம், மூலம், கேட்டை, ரேவதி

நோய் 
நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்
இடுப்புவலி, கடுவன், கரப்பான், வீக்கம், திரிதோடம், தீச்சுரம், நீர்வேட்கை

அகத்தியர் அருளிய  நட்சத்திர மந்திரம்
ஸ்வர்ணப் ப்ரதாயினி சூட்சும சகாயினி ரேவதி தேவி சஹாய க்ருபே.

குரு மூல மந்திரம் : 
ரேவதி நட்சத்திரம்  - மீன  இராசி:
ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஐம் ஜீம் ஓம் சுந்தரானந்தர் என்ற வல்லபச் சித்தரே நம:

காயத்திரி மந்திரம் 

ஓம் விச்வரூபாய வித்மஹே
 பூஷ்ண தேஹாய தீமஹி 
தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்

மந்திரம் குறைந்தது 9 முறையாவது  அல்லது 108 , அதிக பட்சம் 1008 முறை ஜெபிப்பதன் மூலம் நம் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடும்.

1 comment:

  1. உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிக அருமை

    ReplyDelete

sudharsan

96 தத்துவங்கள்

தத்துவங்கள் 96 1. ஆன்ம தத்துவங்கள் -24 2. உடலின் வாசல்கள் -9 3. தாதுக்கள் -7 4. மண்டலங்கள் -3 5. குணங்கள் -3 6. மலங்கள...

ஆன்மீகம்