Monday, October 28, 2019

நவகிரஹங்களின் முழு விபரம் ( குரு )

5. குரு 

இவர் தேவ குரு என்னும் பட்டத்தை உடையவர். இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பூரண சுபர்.
இராசி                         : தனுசு , மீன ராசிகளுக்கு அதிபதி.
திக்கு                          : வடக்கு
அதிதேவதை           : பிரம்மா
ப்ரத்யதி தேவதை   : இந்திரன்
தலம்                          : திருச்செந்தூர்
நிறம்                          : மஞ்சள்
வாகனம்           : மீனம்
வஸ்திரம்         : மஞ்சள் நிற ஆடை
ரத்தினம்           : புஷ்பராகம்
அன்னம்            : கடலைப் பொடி சாதம் , சுண்டல்.
உறவு                 : ஜாதகரின் புத்திரர்களை குறிக்கும்.
உலோகம்             : பொன் 
நட்சத்திரம்   : புனர்பூசம், விசாகம், புரட்டாதி.
தானியம்            : வெள்ளை கொண்டைக் கடலை
குணம்                 : சாத்வீகம்
சுபாவம்               : சவுமியர்
சுவை                   : தித்திப்பு
உடல் அங்கம்   : வயிறு
தாது                      : மூளை
நோய்                   : வாதம்
பஞ்சபூதம்           : ஆகாயம்
பார்வை நிலை : தான் நின்ற ராசியில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களை முழு பார்வை யும், 3, 10 ஆகிய இடங் களை கால் பங்கும், 4, 8 ஆகிய இடங் களை முக் கால் பங்கும் பார்க்கிறார்.
பாலினம்           : ஆண்
உபகிரகம்         : எமகண்டன்
ஆட்சி ராசி       : தனுசு, மீனம்
உச்ச ராசி         : கடகம்
மூலத்திரிகோண ராசி : தனுசு
நட்பு ராசி                           : மேஷம், சிம்மம், விருச்சிகம்
சமமான ராசி                   : கும்பம்
பகை ராசி                          : ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம்
நீச்ச ராசி                            : மகரம்
திசை ஆண்டுகள்           : பதினாறு ஆண்டுகள்
ஒரு ராசியில் 

சஞ்சரிக்கும் காலம்      : ஒரு வருடம்
நட்பு கிரகங்கள்               : சூரியன், சந்திரன், செவ்வாய்
சமமான கிரகங்கள்       : சனி, ராகு, கேது
பகையான கிரகங்கள்   : புதன், சுக்ரன்
அதிக பகையான 

கிரகம்                                  : சுக்ரன்
இதர பெயர்கள்             : ஆசான், பிரகஸ்பதி, அரகுரு மறையோன், அந்தணன், அரசம், தட்சணன்

தொழில்        : பொருளாதாரம், வக்கீல், நீதிபதி, தங்க நகை வியாபாரம், வங்கித் துறை, அறக்கட்டளை நிறுவுதல், தர்மகர்த்தா, ஆசிரியர், வேதங்களை உச்சரித்தல், வைதீகம், ஆலயப் பணிகள், தர்ம சத்திரம் கட்டுதல், கோயில் நிர்வாகம், ஆன்மிகப் பணி, மந்திரி பதவி, மதப் பிரசாரம், அரசாங்க ஆதரவு. குரு பகவான் ஆட்சி, உச்சம் பெற்று இருப்பவர்கள் இவற்றில் ஏதேனும் ஒரு தொழில் ஈடுபட்டால், நிச்சயம் வெற்றி பெறலாம்.

நவக்கிரகங்களில் சுப கிரகமாக திகழ்பவர் குரு பகவான். இவரது பார்வையே ஒருவரை உயர்வான இடத்திற்குக் கொண்டு போய் வைத்துவிடும்.

குரு பகவான் ஒருவரது ஜாதகத்தில் யோகம் பெற்று அமைந்திருந்தால், வறுமையில் இருப்பவனும் கூட ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் நிலைக்கு உயர்த்தப்படுவான். குரு யோகம் பெற்றால், வணங்காதவர்களை கூட இருகரம் கூப்பி வணங்க வைத்துவிடும். கட்டுமஸ்தான உடல்வாகு தரக்கூடியவர் குரு. நிரந்தரமான வெற்றி மகுடத்தை சூட்ட வைப்பவர். மறைந்த பின்பும் சிலையாக இருந்து மரியாதை செய்ய வைப்பவர். விசுவாசம் மிக்க உறவுகள் மனைவி, குழந்தைகள் கொடுப்பார். உயிரை கொடுக்கும் நண்பர்களை தருபவர்.

ஒருவர் ஜாதகத்தில் குரு யோகம் பெற்றிருந்தால், அந்த நபரை அரசியலில் உயர் பதவிகள் தேடி வரும். சட்ட நுணுக்கம் தெரிவதும், கோவில் வேத ஆகம விதிப்படி பூஜை புணஸ்காரம் செய்யும் நுணுக்கமான கலைகள் கற்று இருப்பதற்கு குருவே காரணம். வழக்குகள் சாதகமாக அமைய வைப்பது குருவே. அரண்மனை போன்ற வீடு அமைவதும், அதனை அனுபவிக்கும் பாக்கியம் தருவதும் குரு தான். எல்லா இன்பங்களையும் துறந்து துறவரம் மேற்கொள்ளும் வைராக்கியமான மனதை கொடுப்பவரும் குரு தான். எதையும் தாங்கும் இதயம் என்று சொல்லக்கூடிய, மன உறுதியைத் தருபவர். உடலையே மறைக்கும் அளவில் தங்கம் தரக்கூடியவர். பூர்வீகச் சொத்துகளை அனுபவிக்கும் பாக்கியம் தருபவர். விருதுகள் பெற வைப்பது குருவே; செய்த தர்மங்களால் துன்பங்கள் வராமல் காத்து நிற்கும் புண்ணியத்தைத் தருபவரும் குருவே. குழந்தைகள் மேன்மை அடைந்து அவர்கள் மூலம் ஆதாயம் பெற வைப்பதும் குருவே, மனக்கவலை இன்றி மகிழ்ச்சியான வாழ்க்கையை தருவதும் குரு பகவான் தான்.

இனி குரு கிரகத்தால் உண்டாகும் நோய்களைப் பற்றிப் பார்ப்போம்.

குருகிரக பதிப்பால் வரக்கூடிய நோய்கள்

உச்சிமூளையில் கட்டிகள் உண்டாவது, பெரிய மூளை செயல் இழப்பது, மூளைக்காய்ச்சல் போன்றவற்றிற்கு காரணமானவர் குரு பகவான். நமது மூளையின் சக்தி தரும் அறிவு, அதன் செயல்பாடுகளை குறித்து கூறுவதும் குரு தான். தசை பிடிப்புகள், தசை வலிகள், உடல் வலி இருந்து கொண்டே இருப்பதற்கும் குரு தான் காரணம். கண்கள் கோணல் மாணலாக இருப்பதற்கும், பெருத்த குண்டான உடலுக்கும், மேல் பற்கள் உதட்டிற்கு வெளியே நீட்டிக் கொண்டிருப்பதும் குருவின் ஆதிக்கத்தால் தான். பெண்கள் கர்ப்பம் தரித்து சிசு வளர்வதற்கு பொறுப்பானவர் குரு தான்.

ஒருசிலருக்கு நோய் தீர்க்க போதிய காலம், நேரம், சூழ்நிலை இல்லாமல் போவது, நோய்கள் போக்க பணம் இன்றி தவிப்பது, புளித்த ஏப்பம், கெட்டவாடையோடு வரக்கூடிய ஏப்பத்திற்கு குருவே காரணம். அடிக்கடி ஞாபக மறதியைத் தருபவரும் குரு தான். மனக்கவலை, நிலையான வாழ்க்கை இல்லாமை, மனதிற்கு பிடிக்காத சம்பவங்களாக நடப்பது அனைத்திற்கும் குரு தான் காரணமாக இருக்கிறார்.

குரு பாதிப்பு விதிமுறைகள்


 குரு பகை ராசிகளில் நின்று இருந்தால், அந்த ஜாதகருக்கு நோய்களால் மன உளைச்சல் உண்டாகும். உடல் வலிகள், தசை பிடிப்புகள் இருக்கும். ஏதாவது நோய்க்கு மருந்து சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள். இவர்களது குழந்தைகள் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பர். தாய் தந்தை மனம் அறிந்து நடக்க மாட்டார்கள்.


 குரு நீச்ச ராசியான மகர ராசியில் நின்று இருந்தால், ‘ஏன் இந்த பிறவி எடுத்தோம்’ என்று வருந்தும் அளவிற்கு நோய்கள் தொல்லை கொடுக்கும். உடல் கெட்டு போக ஜாதகரே ஒரு காரணமாக இருப்பார். அஜீரண கோளாறு இருக்கும். இவர்களுக்கு பெரும்பாலும் குழந்தைகள் இருக்காது. அப்படியே குழந்தை இருந்தாலும், அவர்களால் பயன் இருக்காது.

 குரு தன்னுடைய பகை கிரகங்களுடன் சேர்ந்திருந்தால், சுப கிரகமான புதன், சுக்ரன் சேர்ந்து இருப்பது நோய்களின் வீரியத் தன்மையை குறைக்கும் என்றாலும், சர்க்கரை நோய், நரம்பு தளர்வு, ரத்த அழுத்தம் போன்ற பெரிய நோய்கள் தாக்க கூடும். இவர்களது குழந்தைகள் கலைகளில், அறிவில் பெரிய புகழ் அடைவார்கள்.

 குரு தன்னுடைய பகை கிரகங்களின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், அந்த ஜாதகரின் முகத்தில் மருகு, வடுக்கள் வரலாம். பற்கள் சீராக இல்லாமல் இருக்கும். வயிற்றில் கட்டிகள் தோன்றி மறையும். புதிய நோய்கள் வரக்கூடும். குழந்தைகளின் போக்கும் செயலும் கவலை தரக்கூடும்.

குரு லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் நின்றிருந்தால், சிறுவயதில் ஞாபக மறதி வரக்கூடும். உடல் வலிமை இருக்காது. விந்து அணுக்கள் குறைவாக இருக்கும். அஜீரண கோளாறு, கல்லீரல் கோளாறு இருக்கும். இவர்களது குழந்தைகள் அன்பு, பாசம், பரிவு இல்லாமல் இருப்பார்கள்.

 குரு 6, 8, 12 ஆகிய இடங்களின் அதிபதியுடன் இணைந்து இருந்தாலோ, அதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ, உடலில் கட்டிகள் தோன்றி மறையும். பற்கள், ஈறுகளில் ரத்த கசிவு, பற்கள் சிதைவு உண்டாகும். மூளை கெட்டு போன நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பார்கள். தன்னுடைய உடலையே வெறுப்பார்கள்.

குரு லக்னத்திற்கு பாதகாதிபதியுடன் சேர்ந்து இருந்தாலோ, பாதகாதிபதியின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ நோய்களின் வீரியம் அதிகமாகும். உடலை பற்றியும் நோய்களை பற்றியும் போதிய அக்கறை இருக்காது. உயிர்கொல்லி நோய், குடல் இறக்கம் என்னும் நோய்கள் வரக்கூடும். குழந்தைகளுக்கு ஆயுள் கண்டம் வரக்கூடும். அடிக்கடி தொற்றுநோய்கள் தாக்கும்.

குருவே லக்னத்திற்கு பாதகாதிபதியாக இருந்தாலோ, பாதக ஸ்தானத்தில் இருந்தாலோ உடல் வலி, எலும்பு முறிவு, முதுகு தண்டுவடம், எலும்புகள் விலகுதல், கணையம், மண்ணீரல் பாதிப்பு அடையும்.


 குருவை பகை கிரகங்கள் மற்றும் பாதகாதிபதி கிரக பார்வை இருந்தால் தொற்று நோய்கள் வரக்கூடும். உடலில் கட்டிகள், வலிகள் இருக்கும். ஜாதகர் செய்யும் தவறுகள் மூலம் சில நோய்கள் வரக்கூடும்.

குரு காயத்ரி :
ஓம் விருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குருப் ப்ரசோதயாது....
மூல மந்திரம் :
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ப்லீம் ஐம் க்லெளம் க்ரஹாதி பதயே ப்ருஹஸ்பதயே வீம் டஸ்ரீம்ட: ஐம்ட:ஸ்வாஹா...

குரு பகவானை (வியாழன்) வணங்கினால் செல்வமும் புத்திர பாக்கியமும் கிடைக்கும்.


நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும். அதாவது  முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாகச் சுற்றி வந்து வழிபடுதல்  வேண்டும்.


நவகிரகங்களை வழிபடுவது நல்லது என்றாலும், எந்த ஒரு கோயிலிற்குச் சென்றாலும் மூலவரை வழிபடாமல் வெறும் நவகிரக  வழிபாட்டை மற்றும் மேற்கொள்வது தவறானது. நவக்கிரகங்களின் நாயகனாக விளங்குபவர் சூரியன். நமது ஐந்து மதத்தின் ஆறு  பிரிவுகளில் ஒன்றான செளரம் என்பது சூரியனையே முழுமுதல் கடவுளாக கொண்டாடுகிறது. இருகரங்களில் தாமரை ஏந்தி,  வலம் புறம் உஷா, இடது புறம் பிரத்யுஷா என இரு மனைவியருடன் ஏழு குதிரை பூட்டிய ரதத்தில் கம்பீரமாய் வலம்  வருபவர்.


வியாழ பகவான்  - 3, 12, 21 சுற்றுகள் சுற்றவேண்டும். 

No comments:

Post a Comment

sudharsan

96 தத்துவங்கள்

தத்துவங்கள் 96 1. ஆன்ம தத்துவங்கள் -24 2. உடலின் வாசல்கள் -9 3. தாதுக்கள் -7 4. மண்டலங்கள் -3 5. குணங்கள் -3 6. மலங்கள...

ஆன்மீகம்