Monday, October 28, 2019

நவகிரஹங்களின் முழு விபரம் ( சுக்கிரன் )

6. சுக்கிரன்

இவர் அசுர குரு. இவரை மழைக்கோள் என்றும் அழைப்பர். சுபர். 
இராசி                      : ரிஷபம்,துலாம் ராசிகளுக்கு                                               அதிபதி.
திக்கு                        : கிழக்கு
அதிதேவதை         : இந்திராணி
ப்ரத்யதி தேவதை : இந்திர மருத்துவன்
தலம்                        : ஸ்ரீரங்கம்
வாகனம்         : முதலை
தானியம்         : மொச்சை
மலர்                 : வெண் தாமரை
வஸ்திரம்        : வெள்ளாடை
ரத்தினம்           : வைரம்
அன்னம்           : மொச்சைப் பொடி சாதம் .
உறவு                : ஜாதகரின் மனைவியின் நிலையை குறிக்கும்.
உலோகம்         : வெள்ளி
நட்சத்திரம்   : பரணி, பூரம், பூராடம்.
காரகம்               : களத்திரம்
தேவதை           : லட்சுமி
உலோகம்         : வெள்ளி
நிறம்                   : வெண்மை
குணம்                : ராஜஸம்
சுபாவம்             : சவுமியா
சுவை                  : இனிப்பு
உடல் அங்கம்  : முகம்
தாது                     : விந்து
நோய்                   : கபம் (கெட்டியான சளி)
பஞ்சபூதம்          : நீர்
பார்வை நிலை : தான் நின்ற ராசியில் இருந்து 7-ம் இடத்தை முழு பங்கும், 3, 10 ஆகிய இடங்களை கால் பங்கும், 5, 9 ஆகிய இடங்களை அரை பங்கும், 4, 8 ஆகிய இடங்களை முக்கால் பங்கும் பார்ப்பார்.
பாலினம்            : பெண்
உபகிரகம்           : இந்திரதனுஸ்
ஆட்சி ராசி         : ரிஷபம், துலாம்
உச்ச ராசி            : மீனம்
மூலத்திரிகோண ராசி : துலாம்
நட்பு ராசி                            : மிதுனம், மகரம், கும்பம்
சமமான ராசி                    : மேஷம், விருச்சிகம், தனுசு
பகை ராசி                           : கடகம், சிம்மம்
நீச்ச ராசி                             : கன்னி
திசை ஆண்டுகள்            : இருபது ஆண்டுகள்
ஒரு ராசியில் 
சஞ்சரிக்கும் காலம்       : ஒரு மாதம்
நட்பு கிரகங்கள்                : புதன், சனி, ராகு, கேது
சமமான கிரகம்               : செவ்வாய்
பகையான கிரகங்கள்    : சூரியன், சந்திரன்
அதிக பகையான 
கிரகம்                                   : குரு
இதர பெயர்கள்                 : பிருகு, பார்க்கவன், வெள்ளி, கவி சுங்கன், சல்லியன், அகரமந்திரி
தொழில்   : ஆடல், பாடல், நாட்டியம், நாடகம், சினிமா, ஓட்டல், லாட்ஜிங், திருமண மண்டபம், டிராவல் ஏஜென்ஸி, கட்டடக்கலை, ஜவுளித் துறை, நகைக்கடை, நவரத்தின வியாபாரம், மாட்டுப் பண்ணை, கோழிப் பண்ணை, அழகு சாதனப் பொருட்கள், தயாரிப்பு, வாசனை திரவியங்கள் விற்பனை. சுக்கிரன் ஆட்சிஉச்சம் பெற்று இருப்பவர்கள் இவற்றில் ஏதேனும் ஒரு தொழில் ஈடுபட்டால், நிச்சயம் வெற்றி பெறலாம்.

நவக்கிரகங்களில் குரு பகவானைப் போலவே, சுக்ரனும் சுப கிரகமாக அமைந்தவர். அவர் ஒருவரது ஜாதகத்தில் உண்டாக்கும் யோகங்கள் பல.


சுக்ர யோகம் அவ்வளவு எளிதாக யாருக்கும் அமையாது. லட்சத்தில் ஒருவருக்கு தான், சுக்ர யோகம் வாய்க்கும். அடுத்த வேளை உணவுக்கே வழியின்றி தவிக்கும் மனிதனைக்கூட, அடுத்த நொடியே கோடீஸ்வரனாக மாற்றிக் காட்டும் வீரியம் மிகுந்தது சுக்ர யோகம். உடல், முகம் எல்லாம் காந்த ஈர்ப்பும், ஜொலிஜொலிப்பும் உண்டாகும். அந்த ஜாதகரை சுற்றி எந்த நேரமும் பெண்கள் கூட்டம் இருக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் குவியும். மக்கள் விரும்பும் கலைகளைக் கற்று மதிக்கப்படுவார்கள். அரசன் போன்ற வாழ்க்கை அமையும். பெண்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். லாட்டரி, சூதாட்டம் மூலம் பெரும் தொகை வரவு இருக்கும். திருமண யோகம், மனைவி மூலம் வரக்கூடிய வரவுகள் அனைத்தையும் தருவது சுக்ர யோகம் தான். பெண் தொழிலாளர்களைக் கொண்டு தொழிற்சாலை நடத்தும் யோகம், கப்பல் வியாபாரம், பஸ் அதிபதி யோகம், சினிமாத் துறையில் புகழடைந்து பெரும் பணம் சம்பாதிப்பது போன்றவற்றை அளிப்பதும் சுக்ர யோகம் தான். மதம், ஜாதி மாறி திருமணம் செய்வது, முறை தவறி திருமணம் செய்வது, திருட்டுத்தனமான திருமணம் செய்வது போன்றவற்றுக்கு சுக்ரன்தான் காரணம்.

சுக்ரனால் வரக்கூடிய நோய்கள்

நமது உடலில் கெட்ட கொழுப்பிற்கு அதிபதியாக இருப்பவர் சுக்ரன். உடலில் உப்புச் சத்து அதிகமாக இருப்பதற்கும் சுக்ரனே காரணம். ஒற்றைக் கண் அல்லது இடது கண் பாதிப்பு, கண்களில் பூ விழுதல் போன்றவற்றுக்கும் சுக்ரனின் பாதிப்புதான் காரணமாகும். நெஞ்சில் கெட்டியான சளி, மாலைக்கண் நோய், பெண்களுக்கு வரக்கூடிய நோய்கள் ஒரு ஆணுக்கு வருவதும், ஆண்களுக்கு வரக்கூடிய நோய்கள் ஒரு பெண்ணுக்கு வருவதும் சுக்ரனின் பாதிப்பால் தான். உடலில் சர்க்கரை நோய் அதிகரிப்பு, சிறுநீரகத்தில் கல், கட்டிகள், பிறப்புறுப்புகளில் புண், அரிப்பு, தோல் வெடிப்பு, பால்வினை நோய்களுக்கும் சுக்ரனே காரணம்.

காதல் முத்திப்போய் கிறுக்குப் பிடித்து, கை, கால்களை வெட்டிக்கொள்வது, உடலில் உற்பத்தியாகும் சிறுநீர் உடனடியாக வெளியேறுவது, கணவன்-மனைவி தாம்பத்தியத்தால் உண்டாகும் நோய், தவறான உறவுகளால் வரக்கூடிய நோய், உடலில் சேரும் கெட்டக்கழிவுகளால் உண்டாகும் நோய்கள், மது போன்ற போதை வஸ்துக்களால் ஏற்படும் நோய், ஆண் ஒருவர் பெண்ணாக உருவம் மாறுதல், உடலில் சர்க்கரை அளவு குறைவதால் ஏற்படும் மயக்கம் அல்லது உயிரிழப்பு, வாசனை திரவியத்தால் ஏற்படும் ஒவ்வாமை மற்றும் மயக்கம் போன்றவற்றுக்கும் காரணமானவர் சுக்ரன்.

சுக்ரன் தரும் பாதிப்புகள்

சுக்ரன் பகை ராசியான கடகம், சிம்மம் ஆகிய ராசிகளில் நின்று இருந்தால், நெஞ்சு சளி அடிக்கடி தொல்லை கொடுக்கும். மனதிற்கு பிடிக்காத மனைவி அமையக்கூடும்.

 சுக்ரன் நீச்ச ராசியான கன்னிராசியில் இருந்தால், இன உறுப்புகள் பாதிப்பு இருக்கும். விந்து நீர்த்து போக கூடும். விந்து உற்பத்தி தடையாகும். மண வாழ்க்கை வெறுப்பு தட்டும். காமக்களியாட்டத்தில் மனம் ஈடுபடும். உடல் ஒத்துழைப்பு கொடுக்காது. மனைவி மீது பற்றும், பரிவும், பாசமும் இருக்காது.

சுக்ரன் பகை கிரகங்களான சூரியன், சந்திரனோடு இணைந்து எந்த ராசியில் இருந்தாலும், அந்த நபரின் மனம் எப்போதும் உடல் உறவு பற்றியே சிந்திக்கும். சர்க்கரை நோய் கட்டாயம் வரும். நரம்புதளர்வு ஏற்படும். பெரும்பாலும் சுய இன்பத்திலேயே நாட்டம் அதிகம் இருக்கும்.

சுக்ரன் பகை கிரகமான நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், தோல் நோய்கள் வரக்கூடும். சிரங்கு புண்கள், ஆறாத புண்கள் உண்டாகும். உடல் உஷ்ணத்தால் விந்தணுக்கள் உற்பத்தி குறைவாக இருக்கும். மனைவியோடு மன இணக்கம் இருக்காது.

சுக்ரன் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் நின்று இருந்தால், காம சுகத்திற்கு அலைய வேண்டி வரும். பல பெண்களின் தொடர்புகள் மூலம் நோய்கள் வரக்கூடும். நரம்பு தளர்வு, ரத்தக் கொதிப்பு, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வரக்கூடும். மனைவியை விட்டுப் பிரியும் சூழ்நிலை உருவாகும். சிலருக்கு இரண்டு தாரம் அமையும்.

சுக்ரன் 6, 8, 12 ஆகிய இடங்களின் அதிபதியோடு இணைந்து இருந்தாலோ அல்லது அதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ அந்த ஜாதகர், கெட்ட பழக்க வழக்கத்தால் நோய்களைத் தேடிக் கொள்வார். போதை வஸ்துக்களுக்கு அடிமையாக இருப்பார். எந்த நேரமும் மனம் காம சுகத்தையே நாடி இருப்பதால், பல நோய்க்கு இவரே காரணமாக இருப்பார். இவரது மனைவியின் குணம் வித்தியாசமாக இருக்கும். பிடிவாதம், திமிர், ஆணவப்போக்கு தென்படும்.

சுக்ரன் லக்னத்திற்கு பாதகாதிபதியாக சேர்ந்து இருந்தால், விந்து உற்பத்தியை தடை செய்யும். விதைப் பையில் கோளாறு உண்டாகும். சர்க்கரை நோய் நிச்சயம் வரும். உடலில் கெட்ட கொழுப்பு உற்பத்தியாகி உபாதைகளைக் கொடுக்கும். சிறுநீரகத்தில் கற்கள் உற்பத்தியாகும். இவர் தன்னுடைய மனைவி மீது வெறுப்பை உமிழ்வார்.

சுக்ரனே லக்னத்திற்கு பாதகாதிபதியாக இருந்தால், சர்க்கரை நோய் வரக்கூடும். சிறுநீரகத்தில் கற்கள் சேரும். விதைப் பையில் பிரச்சினைகள் இருக்கும். போதை வஸ்துக்கள் மூலம் நோய்கள் வரக்கூடும். உடல் உறவில் நாட்டம் இல்லாமல் இருக்கும். சுய இன்ப பிரியராக இருப்பார்கள். இவரது மனைவி நோயாளியாக இருப்பார். கணவன்- மனைவி இணக்கம் இல்லாமல் இருக்கக்கூடும்.

சுக்ரனை பகை கிரகங்கள் அல்லது பாதகாதிபதி கிரக பார்வை செய்தால், உடலில் கெட்ட நீர் சேரும். உடல் எப்போதும் கழிவுநீரால் துர்நாற்றம் அடிக்கும். விந்து கெட்டித் தன்மை இருக்காது. சிறுநீர் பிரச்சினைகள் வரக்கூடும். இவர் தனது மனைவியின் நடவடிக்கையால், ‘ஏன் திருமணம் செய்தோம்?’ என்கிற மனநிலைக்கு போய்விடுவார்.

சுக்ரனின் உலக பாதிப்பு


சுக்ரன் பகை அல்லது நீச்ச ராசியில் இருந்தாலோ, பகை கிரகமான சூரியன் சந்திரனுடன் இணைந்து இருந்தாலோ சுக்ரன் பாதிப்பு அடையும். நாடுகளுக்கிடையே குழப்பங்களும், பிரச்சினைகளும் வரக்கூடும். பெண்கள் அரசாளும் நாடுகளில் போர் நடக்கும். பெண்கள், ஆட்சியை வெறுப்பார்கள். நாட்டை ஆட்சி செய்யும் பெண்கள், கொலை செய்ய நேரலாம். பெண்களின் கற்புக்கு களங்கம் வரும். பெண்கள் நிம்மதியாக வாழ முடியாமல் போகும். நீர் நிலைகள், குளங்கள் வற்றிப் போகும். அணைக்கட்டுகள் உடைப்பு ஏற்படும். பருவம் தாண்டிய மழையால் மக்கள் அவதிப்படக் கூடும். திடீர் மழையால், திடீர் வெள்ளப்பெருக்கால் மனித உயிர்் இழப்புகள் உண்டாகும். சினிமா, நாடகம் மற்றும் கூத்து கலைகளில் தொய்வு உண்டாகும். நாட்டில் காச நோய்கள் காற்றின் மூலம் பரவும். தண்ணீரில் புது புது நோய்கள் பரவும்.

சுக்ர காயத்ரி :
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாது......
மூல மந்திரம் :


ஓம் ஐம் ஜம் கம் க்ர ஹேச்வராய சுக்ராய நம:


சுக்கிரனை வணங்கினால் நல்ல மனைவி அமையும், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும். அதாவது  முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாகச் சுற்றி வந்து வழிபடுதல்  வேண்டும்.

நவகிரகங்களை வழிபடுவது நல்லது என்றாலும், எந்த ஒரு கோயிலிற்குச் சென்றாலும் மூலவரை வழிபடாமல் வெறும் நவகிரக  வழிபாட்டை மற்றும் மேற்கொள்வது தவறானது. நவக்கிரகங்களின் நாயகனாக விளங்குபவர் சூரியன். நமது ஐந்து மதத்தின் ஆறு  பிரிவுகளில் ஒன்றான செளரம் என்பது சூரியனையே முழுமுதல் கடவுளாக கொண்டாடுகிறது. இருகரங்களில் தாமரை ஏந்தி,  வலம் புறம் உஷா, இடது புறம் பிரத்யுஷா என இரு மனைவியருடன் ஏழு குதிரை பூட்டிய ரதத்தில் கம்பீரமாய் வலம்  வருபவர்.

சுக்கிர பகவான்  - 6 சுற்றுகள் சுற்றவேண்டும்.

No comments:

Post a Comment

sudharsan

96 தத்துவங்கள்

தத்துவங்கள் 96 1. ஆன்ம தத்துவங்கள் -24 2. உடலின் வாசல்கள் -9 3. தாதுக்கள் -7 4. மண்டலங்கள் -3 5. குணங்கள் -3 6. மலங்கள...

ஆன்மீகம்