Monday, October 21, 2019

வருங்காலத்தை முன்கூட்டியே அறியும் சக்தி பெற உதவும் மந்திரம்

வருங்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே அறியும் சக்தி பெற உதவும் மந்திரம்



காலனின் மனைவியான காளி தேவி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாகவும் உக்கிர தெய்வமாகவும் அறியப்படுகிறாள். காளியை எவர் ஒருவர் முழு மனதோடு பூஜித்தாலும் அவர்களுக்கு பர் பல அறிய சக்திகளை காளி தேவி வழங்குவாள் என்று பல நூல்கள் குறிப்பிடுகின்றன. மண்டை ஓட்டினை அணிந்து பார்ப்பதற்கு ஆக்ரோஷமாக இருந்தாலும் காளியின் உள்ளம் கருணை நிறைந்தது. அவளை பூஜித்து கீழே உள்ள மூல மந்திரம் அதை முறையாக ஜபித்தால் வருங்காலத்தில் நடக்கப்போவதை உணரும் சக்தியை கூட நம்மை பெற இயலும் என்று நம்பப்படுகிறது. இதோ அந்த மந்திரம்.

காளி மூல மந்திரம்:

ஓம் க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம்
தக்ஷிணே காளிகே
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா

இந்த மந்திரத்தை முறையான குருவிடம் பயின்று, சரியான நேரத்தில் சரியான எண்ணிக்கையில் எவர் ஒருவர் ஜெபிக்கிறாரோ அவருக்கு வருங்காலத்தில் நடக்க விருக்கும் நிகழ்வுகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் முன்கூட்டியே அறியும் திறன் அதிகரிக்கும். மேலும் இந்த மந்திர சக்தியின் பலத்தால் வீட்டில் எந்த வித தீய சக்திகளும் ஆண்ட முடியாது. இதை ஜெபிப்போர்க்கு ஞானம் பெருகும், செல்வ நிலை உயரும், எதையும் சாதிக்கும் தைரியமும் மனதில் ஒரு தெளிவும் பிறக்கும்.

No comments:

Post a Comment

sudharsan

96 தத்துவங்கள்

தத்துவங்கள் 96 1. ஆன்ம தத்துவங்கள் -24 2. உடலின் வாசல்கள் -9 3. தாதுக்கள் -7 4. மண்டலங்கள் -3 5. குணங்கள் -3 6. மலங்கள...

ஆன்மீகம்